TamilsGuide

முல்லைத்தீவில் காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது.

பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பினர்.

கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உறுதிப்படுத்தி தமக்கு வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் 58 விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளின் உறுதியை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உதவிப் பிரதேச செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a comment

Comment