வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களிற்கான நிரந்தர கிராம சேவையாளரை நியமிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்றது.
பிரதேச செயலக பிரதான வாயிலை மறித்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களை வெளியேற விடாமல் தடுத்தும் அலுவலகத்தினுள் நுழைந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.