TamilsGuide

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (22) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

ஊடக அமையத்தலைவர் சண்முகம் தவசீலனின் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன், போர்க்கால ஊடகவியலாளர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின்போது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்கால ஊடகவியலாளர்கள் 15பேர்  கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், நினைவுப் பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment