TamilsGuide

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்பாட்டமானது சமூக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மேலும் மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டமை .குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment