TamilsGuide

சீனாவின் முடிவால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சி

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த உச்சி மாநாட்டுடன் இணைந்து மொரோக்கோவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைவதன் காரணமாக, ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் நிலையான நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக Fitch Rating Institute தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நாட்டிலுள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் அபாய நிலையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
 

Leave a comment

Comment