TamilsGuide

கிரிக்கெட் வீரர் தனுஷ்கவின் தடை தொடர்பான விசேட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தனுஸ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை நவம்பர் 2022 இல் தனுஷ்காவுக்கு எதிராக கிரிக்கெட் தடையை விதித்தது.

எவ்வாறாயினும் குறித்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த விசாரணைகளுக்கு பின்னர் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தனுஸ்க குணதிலக்க நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிகெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment