TamilsGuide

கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி விஜயம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது பாலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும் போர் தீர்வாக அமையாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் யுத்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, சமாதானத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் தான் பாலஸ்தீனத்தின் கொள்கையை ஆதரிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment