TamilsGuide

யாழ்.சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் நோய்!

யாழ் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பரவியுள்ளது.

இந்நிலையில் கண் நோய் பாதிப்புக்கு உள்ளவர்களை தனிமைப்படுத்தி , நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Comment