TamilsGuide

தென் மாகாணத்தில் இரண்டாம் தவணை பரீட்சை

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டன.

சீரற்ற காலநிலை காரணமாக இன்னும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் இன்று வகுப்புகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கும் தனித்தனியான பரீட்சைகள் நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், தென் மாகாணத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளமையினால் தற்போது நிலைமை கணிசமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment