TamilsGuide

அக்கினியுடன் சங்கமமானார் அமரர் பொன். செல்வராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மறைந்த பொன்.செல்வராசாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று(15.10.2023) மட்டக்களப்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தன.

குறித்த இறுதிக் கிரியைகளில் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, பூதவுடல் கள்ளியங்காடு தகனசாலையில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன்.செல்வராசா தனது 77 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
 

Leave a comment

Comment