TamilsGuide

பமுனுகம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை மீட்பு

பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத்  தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த மனிதத்  தலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை குறித் தலையானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment