TamilsGuide

தம்புள்ளை – மாத்தளை வீதியில் பயங்கர விபத்து

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேற்று இரவு  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணொருவர் தனது 4 வயதுக் குழந்தையை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் வைத்து  இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து காயமடைந்த இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர் பள்ளியவத்தை, மஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனத்  தெரியவந்துள்ளது.

Leave a comment

Comment