TamilsGuide

இம்மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 26,272 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை 

ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 26,272 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதில் 6,293 இந்திய பிரஜைகள் என்றும் 2,352 பேர் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள் என்றும் 1,904 பேர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் இருந்து 1,900 பேரும், ஜேர்மனியில் இருந்து 1,679 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 1,307 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதேநேரம் கடந்த செப்டம்பரில் மொத்தம் 111,938 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 528 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Leave a comment

Comment