TamilsGuide

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமை தொடர்பில் தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment