TamilsGuide

அரிய வகை பிரச்சனையால் அவதிப்படும் நடிகை ரச்சிதா

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஆளே யாரென்று தெரியாத அளவிற்கு மாறி நடித்தார். அதன்பிறகு அவர் நடித்த தொடர் சரவணன்-மீனாட்சி, இந்த தொடரில் தனது நிஜ அழகில் நடித்து தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.
  
2,3 சீசன்கள் அந்த தொடர் பெயரில் நடித்த அவர் அதன்பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சொந்த விஷயங்களை கூறி ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார்.

அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதா பேசும்போது, எனக்கு வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. பொதுவாகவே உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும், அதுதான் இயல்பான விஷயம்.

ஆனால், எனக்கு சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட எடை கூடி விடுகிறது. இப்படிப்பட்ட அரிய வகை ஹார்மோன் பிரச்சனையால்தான் நான் அவஸ்தைப்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment