TamilsGuide

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 

Leave a comment

Comment