TamilsGuide

தங்க நகைகளை கொள்ளையடிக்க 2 கொலை - 25 வயது இளைஞன் கைது

மாத்தறை பிரதேசத்தின் ப்ரீத்தி பிரவுன்சில் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த 67 மற்றும் 70 வயதான பெண்களை சிலர் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் வருகை தந்த போது பணிப்பெண்கள் இருவரையும் காணாத நிலையில் அயலவர்களுடன் இணைந்து குறித்த உரிமையாளர் தேடியுள்ளார். இதன்போது, அவர்கள் கொலை செய்யப்பட்டு கழிவறைக்குள் காணப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சமயத்தில் வீட்டின் அலுமாரி உடைக்கப்பட்டு தங்கம் அல்லாத 12 வளையல்கள், 2 மாலைகள், தங்க கரண்டி ஒன்று மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பன களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த மாத்தறை பொலிஸார் 25 வயதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதோடு அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a comment

Comment