TamilsGuide

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச்  சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புகைப் பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக தற்போது இந்த புகைப் பரிசோதனைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருளின் தரம் தொடர்பிலும் சிக்கல் உள்ளது. அதுமட்டுமல்லாது தனியார் பேருந்துகளும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளும் ஒரே சேவையை வழங்குகின்றன. ஆனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு புகைப் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

எனவே, வரும் ஜனவரி மாதம் முதல் எங்கள் பேருந்துகளை புகைப் பரிசோதனையில் இருந்து நீக்குமாறு போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க உள்ளோம்” இவ்வாறு கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment