TamilsGuide

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மருத்துவ பீட மாணவி காணமாற்போயுள்ளார் என அவரது பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில்  கடந்த 3 ஆம் திகதியில் இருந்து அவரது தொலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு  அவரது பெற்றோர் வந்துள்ளனர்.

இதனையடுத்து விடுதியில் சென்று பெற்றோர் விசாரித்த போது , மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Comment