TamilsGuide

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

இந்நிலையில்  நாடு முழுவதும் 2,888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் எனவும்,  புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், விசேட வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை  மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a comment

Comment