TamilsGuide

சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து – மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment