TamilsGuide

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக  நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிச்சேவை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடமும்  நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment