TamilsGuide

கொம்மாந்துறையில்  வயோதிபப் பெண்ணைத் தாக்கி தங்க நகை பறிப்பு

மட்டக்களப்பு,  கொம்மாந்துறைப்  பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது 10 பவுன் பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான இன்று தனிமையில் இருந்த  குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள்    நுழைந்த கொள்ளையன்  அவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த  தங்க சங்கிலியைக்  கத்தியால் அறுத்துக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளான்.

இதில் படுகாயமடைந்த  மூதாட்டி  அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment