TamilsGuide

முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகத் தொடரும் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02)  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) 2 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது ”நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம்” என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 

Leave a comment

Comment