TamilsGuide

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமான கோவிந்த கருணாகரம் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு தேவாநாயகம் மண்டபத்தில்  நடைபெற்ற ”ஜனாவின் வாக்குமூலம்” என்ற  நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்   மேலும் தெரிவிக்கையில்”இலங்கையில்  எங்கு பாத்தாலும் புத்தபிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள்  தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
 

Leave a comment

Comment