TamilsGuide

யாழில் காந்திஜெயந்தி

யாழில் இன்று  மகாத்மா காந்தியின் 154 வது ஜனன தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரகமும், காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜா காந்தி சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், மௌலவி சுபியான், அருட்தந்தை றொசான், யாழ் ன. பல்கலைக்கழக துணைவேந்தர் ச.சற்குணராஜா, இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment