TamilsGuide

யாழ்ப்பாணத்தில் உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”  கடந்த 1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் செம்டெம்பர் 27 ஆம் திகதி  உலக சுற்றுலா தினமாகப்  பிரகடனப்படுத்தப்பட்டது.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை,  கொரோனா தொற்றினுடைய தாக்கம் என்பவற்றினால்  வட மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளாக உலக சுற்றுலா தினம் அனுஸ்டிக்கப்படவில்லை.

இதன்காரணமாக ஏனைய மாகாணங்களோடு ஒப்பிட்டு பார்க்கின்ற போது வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையினுடைய வளர்ச்சி, மற்றும் இது குறித்தவிழிப்புணர்வு என்பன மக்கள் மத்தியில்  மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தை சிறப்பான முறையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் வெளிப்புறத்தில் வரும்  29ஆம் திகதி கொண்டாடவுள்ளோம். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக் கூடங்கள் என்பவற்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment