TamilsGuide

வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி

வவுனியவில் பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. அண்மையில் பனை அபிவிருத்தசபையின் அனுசரனையோடு வவுனியா உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான  பயிற்சி நெறியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பயிற்சிநெறியையடுத்து, இன்று நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில்  இதற்கான  கண்காட்சி நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ கலந்துகொண்டிருந்தார். இதன்போது மரநடுகை உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment