TamilsGuide

மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு 

முல்லைத்தீவு மாவட்டம்,  மல்லாவி ஒளிரும் வாழ்வு  சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்லக்  கட்டிடம் நேற்றுத் (27)   திறந்து வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனுடையவர்களின்  துயர் துடைக்கும் சமூக சேவை  அமையமாக கடந்த தசாப்த காலமாக இயங்கி வரும் ”ஒளிரும்வாழ்வு சமூக சேவை அமையத்தின்” ஓர் அங்கமாகவே   குறித்த மகிழ்வு  இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

அந்தவகையில் குறித்த கட்டிடத்தை  உளநல வைத்திய நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் சிவயோகன் அவர்கள் திறந்து  வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் மத குருமார்கள்   , ஆயுள்வேத வைத்தியர் சிவரஞ்சனி சுசீந்திரன்,அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் துசாந்தினி, மல்லாவி வர்த்தகர்கள் ,,மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
 

Leave a comment

Comment