TamilsGuide

தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன் கைது

மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது.

சம்பவ தினமான நேற்று குறித்த நபர்   குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது அதனைத் தடுக்க முற்பட்ட தாயாரின் மீதும்  அந்நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment