TamilsGuide

ஓட்டமாவடியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

மட்டக்களப்பு,  ஓட்டமாவடியில் 57 வயதான  நபர் ஒருவர் குடும்பத் தகராறில்  தனது  மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான இன்று குளியலறைக்குச் சென்ற தனது மனைவியை குறித்த நபர்  கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவரது கழுத்தையும் கையையும் வெட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண்  தன்னைக் காப்பாற்றுமாறு அபாயக் குரல் எழுப்பியுள்ள நிலையில்  அங்கு வந்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment