TamilsGuide

மன்னார்- உயிலங்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் மீட்பு

மன்னார்,உயிலங்குளம்- நெடுங்கண்டல் பிரதான வீதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்றிரவு  பொலிஸாரினால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  அடம்பன் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ள நிலையில் அவர் விபத்திற்கு உள்ளானாரா?  அல்லது  அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment