TamilsGuide

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது அவரை 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக காலி நீதவான் அறிவித்தார்.

சொகுசு காரை சட்டவிரோதமாக மாற்றியமைத்தமை தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a comment

Comment