TamilsGuide

உயர்தரப் பரீட்சை தொடர்பில் திங்கட்கிழமை இறுதி தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்

இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள திகதிகள் திருத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்னதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 
 

Leave a comment

Comment