TamilsGuide

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர் கைது

மட்டக்களப்பில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும்,  குறித்த  இளைஞரிடம் இருந்து 800 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  இளைஞர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment