TamilsGuide

அனுராதபுரத்தில் மதுபான விருந்தின் போது அரங்கேறிய கொடூர சம்பவம்! ஒருவர் உயிரிழப்பு 

அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (24-09-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவம், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் கலந்து கொண்ட மதுபான விருந்தின் போதே  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விருந்தின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (23-09-2023) பிற்பகல் உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்துகொண்ட இருவரே இந்த கொலையைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
 

Leave a comment

Comment