TamilsGuide

இலங்கை கடன் தொடர்பாக புதிய தகவல்

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை பங்களாதேஷிடம் இருந்து இலங்கை 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலர்களையும் செலுத்தியது.

அத்துடன் அந்த கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment