TamilsGuide

சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுச் சிறுவன் கைது

12 வயதான சிறுமியைப்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குருந்துவத்தை கரகல பிரதேசத்தைச்  சேர்ந்த 14 வயதான சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதே வேளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சிறுமி  ஏற்கனவே அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அந்த சம்பவம் தொடர்பில் அவரது தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அச்சிறுமி மீண்டும் குறித்த சிறுவனால்  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment