TamilsGuide

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகளின் 78 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்கா நியூயோர்க் நகரிற்கு விஜயம் முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி டுபாயில் இருந்து காலை 8.32 மணிக்கு வந்த எமிரேட்ஸ் விமான சேவையின் நுமு-650 என்ற விமானத்தில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 15 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற்ற ஜீ.77 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டார்.

இதன் பின்னர் கடந்த 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் 78 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்கா நியூயோர்க் நகரத்திற்கு பயணித்திருந்தார்.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment