TamilsGuide

திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழில் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து குறித்த ஊர்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஊர்தி பவனி கொடிகாமத்தில் ஆரம்பிக்கப்பட்டு சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை அடைந்து நாளை மறுதினம் யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment