TamilsGuide

கனடாவில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 

Leave a comment

Comment