TamilsGuide

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்  செல்ல  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இவ்வழக்கு விசாரணையும் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment