TamilsGuide

யாழில் கால் பதித்தது சனச லைஃப் இன்சூரன்ஸ்

சனச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் கிளையொன்று இன்று (21) யாழில் திறக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் சனச லைஃப் இன்சூரன்ஸ் யாழில் தனது கிளையை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்போடு, மங்கள வாத்தியங்கள் முழங்க யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் புதிய கிளை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சனச லைஃப் இன்சூரன்ஸ் இன்று யாழில் காலடி எடுத்துவைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இந்த நிறுவனம் திறந்துவைக்கப்படுவதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது சேவைகளை நேரடியாக வீடுகளுக்கே வந்து வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள்  இதன்போது தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment