TamilsGuide

நடிகர் சாந்தனுவுடன் பிரேக் அப் செய்த கிகி..  - மனம் திறந்த தொகுப்பாளினி! 

தொகுப்பாளினி கிகி தனது கணவருடன் பிரேக் அப் செய்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளரான பாகியராஜின் மகன் தான் சாந்தனு. இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், கதைகளை செலக்ட் செய்து தனித்துவமான படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த கிகி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரேக் அப் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "நானும் சாந்தனுவும் காதலித்து கொண்டிருக்கும் பொழுது, என் தோழி ஒருவர் அவர் வேறொரு பெண்ணுடன் காஃபி ஷாப்பில் இருப்பதாக தொலைபேசியில் கூறினார்.உடனே நான் சாந்தனுக்கு தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன். அவர் தன்னுடைய அப்பாவுடன் இருப்பதாக பொய் சொல்லிவிட்டார்.

இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டு 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தோம். அதன் பிறகு மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்" என்று கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment