TamilsGuide

அவுஸ்திரேலியாவில் நடுரோட்டில் உடல் கருகி உயிரிழந்த பெண்

சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார். சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார் 4.20 மணிக்கு குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பிக்-அப் லொறியில் பயணித்த சேல மௌமலங்கா என்ற பெண்மணி உடல் கருகி மரணமடைந்தார்.
  
இவரது உறவினர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் 37 வயதான மௌமலங்கா பயணித்த பிக்-அப் லொறி நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

இதில் சிக்கிக்கொண்ட அவர் பரிதாபமாக பலியானார். சிட்னியின் டோங்கன் சமூகத்தை சேர்ந்தவர் சேலா மௌமலங்கா. அவரது திடீர் மறைவு அந்த சமூக மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில், உங்களை மீட்க நான் இல்லாமல் போனேன் என ஒருவர் உருக்கமாக அஞ்சலி செய்துள்ளார். நீங்கள் தூக்கத்தில் இருப்பது தெரியும், எழுந்து வாருங்கள் என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

அழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டவர் நீங்கள், ஒரு காலத்திலும் இந்த நினைவுகள் நீங்காது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment