TamilsGuide

ரவீந்தருக்கு சிறையில் A-கிளாஸ் கேட்ட நடிகை மஹாலக்ஷ்மி

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் ரவீந்தர். அவர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் இந்திய அளவில் வைரலான ஒன்று. சமீபத்தில் தான் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனதை கொண்டாடி இருந்தார்கள்.
  
கழிவில் இருந்து கரெண்ட் தயாரிக்கும் பிராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் என சொல்லி 16 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரால் தற்போது ரவீந்தர் கைதாகி சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்கவேண்டும் என மஹாலக்ஷ்மி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இன்னொரு மனுவும் பதிவ செய்திருக்கிறார்.

ஆனால் அந்த இரண்டு மனுக்களையுமே நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 
 

Leave a comment

Comment