TamilsGuide

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில்  இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து இன்று  உயிரிழந்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் என்ற 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment