TamilsGuide

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார்  கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஜே.நிக்சன், ரி. சுமித்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளனர்.

மேலும் குறித்த  இருவரும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த  குடும்பஸ்தர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள், கடுமையான காற்று மற்றும்  கடல் கொந்தளிப்புப்  காரணமாக உடன் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment