TamilsGuide

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்

பெல்ஜியத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றும் Shri Santosh Jha வை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக,இந்தியா நியமித்துள்ளது.

அவர், விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்துவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Shri Santosh Jha Brussels, க்கான இந்திய தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் 2019 ஜூலைஇ முதல் 2020 ஜூலை வரை உஸ்பெகிஸ்தானில் இந்திய தூதராகவும் பணியாற்றினார்.

அத்துடன் 2017 ஜூலை முதல் 2019 ஜூன் வரை, அவர் வொஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரகத்தின் தனிப்பட்ட அந்தஸ்துடன் துணைத் தூதராக பணியாற்றினார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் தூதுவர் சந்தோஷ் ஜா, கோபால் பாக்லேவுக்குப் பதிலாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகநியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Comment