TamilsGuide

நல்லூர் கந்தனைக் காணச்சென்றவர்களது வீட்டில் 53 பவுண் தங்க நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய 53 பவுண் பெறுமதியான தங்க  நகைகள்  மற்றும் 100 அமெரிக்க  டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் வசித்தவர்கள் நல்லூர் திருவிழாவுக்கு சென்றுள்ள வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment